Search This Blog

Wednesday, April 19, 2017

மீண்டும் ஒரு முறை

மீண்டும் ஒரு முறை

அந்த சிரிப்பினை அணிந்து கொள்

மீண்டும் ஒரு முறை

உன் மது கோப்பையினை உயர்த்து

மீண்டும் ஒரு முறை

அந்த இசைத்தட்டை சுழலவிடு

மீண்டும் ஒரு முறை

உன் கேள்வியினை கேள்

மீண்டும் ஒரு முறை

உன் காதல் சொல்

மீண்டும் ஒரு முறை

அந்த முத்தம் கொடு

மீண்டும் ஒரு முறை 

வெட்கம் அவிழ்

மீண்டும் ஒரு முறை

பயம் விலக்கு

மீண்டும் ஒரு முறை

உன் கனவுகள் சொல்

மீண்டும் ஒரு முறை

இரவில் நடனமிடு

மீண்டும் ஒரு முறை

கடற்கரையில் கை கோர்த்து நட

மீண்டும் ஒரு முறை

கண்ணீரோடு பார்

மீண்டும் ஒரு முறை

கவிதைகள் படி


மீண்டும் ஒரு முறை

நீ நீயாக இரு.

No comments:

Post a Comment