Search This Blog

Sunday, April 16, 2017


 இனி காதல் கவிதைகள் எழுதவதில்லை
என முடிவெடுத்த நாளொன்றில்
நாம் கடைசியாய் முத்தமிட்டுக்கொண்டோம்

பூக்களின் மேல்
கைவைப்பது போல்
மிக மென்மையாய் கை குலுக்கி
முட்களின் மேல் 
கால் வைப்பது போல்
தரையில் பட்டும் படாமல் நகர்ந்தாய்

ஒரு ஒற்றை நட்சத்திரம்
மிக அதிகமாய் ஒளிர்வது 
பார்த்தபடி நெடு நேரம் அமர்ந்திருந்தேன்

கவிதைகளற்ற உலகின்
இருட்டு மவுனம் 
பயமுறுத்தியது

சிணுங்கி ஒளிர்கிறது
அந்த ஒற்றை நட்சத்திரம்
இருட்டு மவுனம் கலைத்தபடி.

No comments:

Post a Comment