Search This Blog

Sunday, April 16, 2017

ஒற்றைத் துளியாய்



தீராக்காதலின்
ஒற்றை முத்தமாய்

அளவில்லா மகிழ்ச்சியின்
ஒற்றை சிரிப்பாய்

ஓயாத போராட்டத்தின்
ஒற்றை முழக்கமாய்

விடியாத இரவின்
ஒற்றை வெளிச்சப் பொட்டாய்

முடிவில்லா கானகத்தின்
ஒற்றை பெருமரமாய்

மீளாத்துயரின்
ஒற்றை கண்ணீர்த் துளியாய்

ஏதேனும் ஒன்றாய்
அமையட்டும்
என் கவிதை.

No comments:

Post a Comment