Search This Blog

Sunday, December 30, 2012


காலை வேளைகள்
கடற்கரை மணலில்
கிளிஞ்சல்கள் பொறுக்கியபடியும்
நண்டுகள் துரத்தியபடியும்
மகனோடு கழிந்தன.

குளக்கரை எருமையாய்
மதியங்கள் கரைந்தன
நீச்சல் தொட்டிகளில்.

சோப்பு பெட்டி உடையும்
குளிர் கண்ணாடியுமாய்
பெண்கள் பார்க்க
வயது குறைந்து வழிந்தது

இளையராஜாவும்
தொஸ்தாவெஸ்கியும்
இரவுகளை ஆக்ரமிக்க
கொஞ்சம் வோட்காவுடன் கொண்டாடினேன்
அந்த கூடலையும்.

படிக்காத புத்தகங்கள்
கேட்காத இசை
ரசிக்காத இயற்கை
அணைக்காத குடும்பம்…

முடிந்தது விடுமுறை.

ஆயுதங்கள் தாங்கி
நாளை மீண்டும் செல்வேன்
கார்பொரேட் காட்டுக்குள்

வேட்டைகள் தொடரும்.
வெறும் வாழ்தலுக்காய்.