Search This Blog

Sunday, April 16, 2017

ஓயாமல் என்னுள்
ஒலிக்கும் யாழினை
மீட்டுதல் நீயா

தீராமல் என்னுள்
ஓடும்  நதியின்
ஊற்றுக்கண் நீயா

நான் சொல்லாமல்
விட்டுவிட்ட சொற்களின்
சப்தங்கள்  நீயா

விடை இல்லாமல்
போகின்ற கேள்விகளின்
பதில்களும் நீயா

நான் எழுதாமல்
தவறவிட்ட கவிதைகளின்
அர்த்தங்கள் நீயா

நில்லாமல் என்னுள்
ஓடும் காலத்தின்
அச்சாணி நீயா...



No comments:

Post a Comment