உடம்பிலிருந்து வெட்டுண்ட
பல்லியின் வாலொன்று
துடித்துக்கொண்டிருக்கிறது.
வெட்டுண்ட வலியா
விடுபட்ட வேதனையா
மீண்டும் இனணயத் துடிக்கும் தவிப்பா.
செய்வதறியாது பார்த்துக்கொண்டிருக்கிறேன் .
"ம்...பார்க்கலாம்" என்ற ஒற்றை
சொல்லில்
விடுபட்டு சென்ற நீ
இன்று
கனவில் வரப்போகிறாய்.
No comments:
Post a Comment