Search This Blog

Saturday, April 14, 2018

ஒண்ணும் சொல்லரதுக்கிள்ள





மாட்டுக்கறி தின்னா
மலச்சிக்கல் ஆகுமய்யா
ஆடிருக்கு தின்னுமைய்யா
கோழி ரசம் குடிங்கைய்யா
நல்லது சொன்னாக்க
பயபுள்ள கேக்கலையே
அடங்காத புள்ளையத்தான்
அடி ரெண்டு போட்டேன்ய்யா
அதப்போயி பெரிசு பண்ணி
டிவி-ல போட்டாய்ங்க
பாத்த சனம் அத்தனையும்
பாராட்டி போனாய்ங்க


மாதா கோயிலுக்கு
போன பய அத்தனையும்
மாரியாத்தா கோயிலுக்கு
மணி அடிச்ச பயலுவதான்
“மாரியாத்தா மன்னிப்பா
ஓடி வாடா இங்கிட்டு
செஞ்சது செஞ்சுபுட்ட
திரும்பி வாடா தப்பிச்சு”
கொஞ்சமா கண்டிச்சு
இதத்தான்யா நான் சொன்னேன்
ஓடுகாலி கழுதயத்தான்
ஒட்டி வர நான் போனேன்
கூட்டி வருகையில
ஒப்பாரி எதுக்குன்னு
ஏசுறது எதுக்குன்னு
இன்னிவர புரியல்ல

உண்ட வீட்டத்தான்
ரெண்டாக்க பாக்குறது
என்ன நியாயமுன்னு
நான் கேட்டா தப்பாய்யா
எக்கு தப்பா பேசினவன்
அஞ்சாறு பேரானா
நாங்க ஐநூறு பேராவோம்
பேசினவன் நாக்கறுப்போம்
“மூடிட்டு நீ இருந்தா
முழுசாவே நீ இருப்ப”
சொல்லி முடிக்கல நான்
பயத்துல பாதி பேரு
ஊர விட்டு ஓடிட்டான்
சொல்லி மாளாது
எம் பெரும தீராது

ட்விட்டரில திட்டுவாய்ங்க
பேஸ்புக்கில் போடுவாய்ங்க
வேலையத்த பயலுவதான்
வீண் வதந்தி கிளப்புறாய்ங்க
விபச்சாரின்னு வஞ்சாச்சு
கெட்ட வார்த்த சொல்லியாச்சு
மானங்கெட்ட பயலுவைய்யா
மறுபடியும் எழுதறாய்ங்க



ஒத்த சொல்லு அவரு கொடுத்தா
ஒரு நூறு ஒலியாகும்
சொன்னவனுக்கு வலியாகும்
அகிம்சைதான் வழியின்னு
அண்ணல் அவர் சொன்னாரு
அவரு மட்டும் கையசச்சா
உங்க கத கந்தல்தான்

திருப்பி சொல்லுறேன்
நல்லபடி கேட்டுக்கோ
“மூடிட்டு நீ இருந்தா
முழுசாவே நீ இருப்ப
உன் தலைவனும் மோடிதான்
இல்லேன்னா நீ பாடிதான்”












No comments:

Post a Comment