Search This Blog

Saturday, April 14, 2018

சொடுக்கிய சாட்டை ஒலிக்கு
பயந்து நடக்கிறது.
படு என்றவுடன் படுக்கிறது
நாற்காலி விட்டு நாற்காலி தாவுகிறது.
வளையத்துக்குள் எம்பி குதிக்கிறது
சொன்னபடி செய்தால்
ஒரு கறித்துண்டு கிடைக்கிறது
சிங்கம் செய்த வித்தைகள் கண்டு
கை தட்டி வியக்கிறது சர்கஸ் கூட்டம்
மார் தட்டி நிற்கிறான் மனிதன்.
சுயம் இழந்து
பலம் மறந்து
சிரம் கவிழ்ந்து
கூண்டுக்குள் செல்லும்
சிங்கம் காண்கையில்...
கோபமும் வருத்தமும்
ஒன்றாய் எழுகிறது

No comments:

Post a Comment