உன் கனவுகள் இல்லா இரவுகளில்
நான் உறங்குவதேயில்லை
நான் உறங்குவதேயில்லை
உன் நினைவுகள் இல்லா பகல்களில்
நான் விழிப்பதேயில்லை
நான் விழிப்பதேயில்லை
வெட்டி ஏறிந்தாலும்
மீண்டும் முளைக்கும் மூங்கிலாய்
துளிர்விட்டுக்கொண்டே இருக்கிறது
உனக்கான என் அன்பின் மீதி
மீண்டும் முளைக்கும் மூங்கிலாய்
துளிர்விட்டுக்கொண்டே இருக்கிறது
உனக்கான என் அன்பின் மீதி
துவட்டி முடித்து
தூக்கி எறிந்த துண்டாய்
என் நினைவுகள்
உன் மனதின் ஏதோ ஒரு மூலையில்
தூக்கி எறிந்த துண்டாய்
என் நினைவுகள்
உன் மனதின் ஏதோ ஒரு மூலையில்
குவித்து வைத்த
மணல் கோபுரமாய்
என் மனமெங்கும் நீ
ஒரு ஒற்றை சொல்லில்
கோபுரம் கலைத்தாய்
மணல் மட்டும் பரவிக் கிடக்கிறது
மணல் கோபுரமாய்
என் மனமெங்கும் நீ
ஒரு ஒற்றை சொல்லில்
கோபுரம் கலைத்தாய்
மணல் மட்டும் பரவிக் கிடக்கிறது
No comments:
Post a Comment