Search This Blog

Saturday, April 14, 2018



உன் கனவுகள் இல்லா இரவுகளில்
நான் உறங்குவதேயில்லை
உன் நினைவுகள் இல்லா பகல்களில்
நான் விழிப்பதேயில்லை
வெட்டி ஏறிந்தாலும்
மீண்டும் முளைக்கும் மூங்கிலாய்
துளிர்விட்டுக்கொண்டே இருக்கிறது
உனக்கான என் அன்பின் மீதி
துவட்டி முடித்து
தூக்கி எறிந்த துண்டாய்
என் நினைவுகள்
உன் மனதின் ஏதோ ஒரு மூலையில்
குவித்து வைத்த
மணல் கோபுரமாய்
என் மனமெங்கும் நீ
ஒரு ஒற்றை சொல்லில்
கோபுரம் கலைத்தாய்
மணல் மட்டும் பரவிக் கிடக்கிறது

No comments:

Post a Comment