Search This Blog

Monday, January 16, 2017




உனக்கான முத்தத்தை மட்டும்
நான் இன்றும் வைத்துள்ளேன்

என் இத்தனை முத்தங்களில்
உனக்கானது மட்டும் தனியாக உள்ளது

இத்தனை வருடங்களாகியும்
இன்னும் ஈரமாய் இருக்கிறது அது

ஈரம் காய்கின்ற தருணங்களில்
கொஞ்சமாய் என் ரத்தம் தெளிக்கிறேன்


என்றேனும் அதன் ஈரம் சுவைக்கையில்
உனக்கு கொஞ்சமாய்
ஒரு சிவப்பு நினைவுக்கு வரும்


அப்போது இந்த கவிதையை நினைத்துக்கொள்

No comments:

Post a Comment