Search This Blog

Friday, October 21, 2011

வறுமையின் வர்ணங்கள்

மழிக்கப் படாத முகம்
அடர்ந்த கண்கள்
கிழிந்திருந்த சட்டை

வறுமையை உடுத்திக் கொண்டு
பலூன் விற்றுக் கொண்டிருந்தான்

சிரித்தபடி
பலூன் ஊதி
சிரத்தையாய் நூல் கட்டி கொடுத்தான்

பத்து ரூபாய்க்கு
இரண்டு பலூன்
சிரித்தபடி கொடுத்தான் அந்த குழந்தைக்கு.
'இன்னும் இன்னும்' என்றபடி
அழுகின்றது அந்த குழந்தை

சிரித்தபடி
இன்னும் இரண்டு பலூன்களை
குழந்தை கையில் திணிக்கிறான்.
சிரிக்கிறது குழந்தை.

காருக்குள் இருந்த தகப்பன்
'பணம் வேஸ்ட், இரண்டு போதும்'
என்று குழந்தையை திட்டி
பலூன்களை பிடுங்கும்போது

அந்த பலூன்காரன்
பணம் வாங்காமல்
நகர்ந்தான்.

சிரிக்கிறது குழந்தை.

பலூன்களின் வர்ணம்
அவன் மீது வழிந்து
வறுமை நிறத்தை அழித்தது.

1 comment: