Search This Blog

Thursday, October 20, 2011

கழகத்து கண்மணிகளுக்கு...


தமிழா !!
கம்பிக்கு பின்னே
கனிமொழி அல்ல
தமிழ் மொழி.

கவிதையை
சிறையெடுத்து
கதை செய்துவிட்டனர்

தமிழுக்கு
விலங்கிட்டு
தடை செய்துவிட்டனர்

சிறைபட்டு கிடக்கிறது
தமிழினத்தின்
தன்மானம்.

கொடுத்து சிவந்த கைகள்
வாங்கி சிவந்ததென
குற்றச்சாட்டு

திராவிட தர்மத்தின்
வாழ்வுதனை கவ்வியது
ஆரிய சூது.

பாஞ்சாலி துகிலுறிய
பாண்டவருமல்லவா
முனைகின்றனர்.

எறிவதற்கு சிலம்பும் இல்லை
எரிப்பதற்கு மதுரையும் இல்லை

‘நிதி’க்கும்
நீதிக்கும் போராட்டம்.
வீதிக்கு கொண்டாட்டம்.

கவிதை அருவியை
கைப்பைக்குள்
அடைக்க முடியுமா?

தீக்குச்சியை
தீப்பெட்டிக்குள் அடைக்கலாம்.
தீப்பொறியை அடைக்க முடியுமா?


தமிழா ! வெற்றி நமதே !!

1 comment:

  1. Koduththu chivantha kaigalukku kodukkap paNam engirunthu vanthathu? Nidhi moolam? Karuna Nidhi moolam!

    ReplyDelete