Search This Blog

Sunday, August 9, 2015

வெ(ற்)றிக் கொடிகள்

மெசப்படோமியாவில் ஆரம்பித்து
க்ருசேடுகளில் வளர்ந்து
ஜிகாதுகளில் பெருகி
காசாவில் காலூன்றிய நேற்று வரை..
எல்லா போர்களிலும்
அழுகிய பிணங்களின் மேல் ஒரு காலும்
அழுகின்ற முகங்களின் மேல் ஒரு காலும் வைத்து
மரணத்தின் வாடையோடு
குருதி தோய்ந்த கரங்களால் நடப்படுகின்றன
வெ(ற்)றிக் கொடிகள்.

No comments:

Post a Comment