Search This Blog

Wednesday, August 29, 2012

கரைகின்ற கரைகள்

எகிறிக் குதித்து
கதறி அழுது
கட்டி அணைத்து
கரைகளை
அழைத்துக் கொண்டே
இருக்கிறது அலைகள்

விட்டுத் தொலைத்து
விலகி நடந்து
அலைகளோடு இணக்கமாக
கரைகளுக்கென்னவோ ஆசைதான்
நிலமென்னும் பந்தம்
இடையில் நிற்கும்

கரைதனில் 
கரம் வைத்துப் பார்க்க
அலைகளின் துளிகள்
அலைகளை 
அலசிப் பார்க்க
கரைகளின் துகள்கள்

ஒன்றுக்கொள் ஒன்றாய்
கலந்த பின்னும்
ஒட்டாது நிற்கும்
கரைகளும் அலைகளும்

அலைகளின் அழுகை
துவர்ப்பாய் மாற்றியது கடலை

இயற்கையின் நியதியால்
சேராது நிற்கும்
கரைகளும் அலைகளும்
ஆண்டாண்டு காலமாய்

கரைகளின் தலை மேல் கால் வைத்து
அலைகளின் கைகளை மிதிக்கிறான்
மனிதன் 
சிரித்துக்கொண்டே.


No comments:

Post a Comment