இறைவா…இறைவா
என்செய நினைத்தாய்
எமது குழந்தைகளை.
பூப்பதற்கு முன்னால்
எதற்கு பறிக்கிறாய்
இந்த பிஞ்சுகளை
உனது பன்னிரு முகங்கள்
பல்லாயிரம் விழிகள் கொண்டு
சற்றே உற்றுப்பார்
எடுப்பதற்கும் பறிப்பதற்கும்
ஆயிரம் உண்டிங்கு
உதவாக்கரை உயிர்கள்
களைவதற்கும் கொய்வதற்கும்
இந்த மலராத பூக்கள்
எதற்கு உனக்கு
அக்கினியை அனுப்பி
மொத்தமாய் பொசுக்குவதும்
வாழைப்பழத்தினால்
வாயை அடைப்பதும்
ஓடும் பேருந்தில்
ஓட்டைகள் விழுவதும்
நீச்சல் குளத்தில்
ஜலசமாதி நிகழ்வதும்
இன்னும்
எத்தனை குழந்தைகள்
வேண்டும் உனக்கு
உமது குழந்தைகள்
ஞானப்பழத்திற்காய் உலகம் சுற்ற
எமது குழந்தைகள்
வாழைப்பழத்தினால் உலகம்
துறப்பதா
இவைகளும் உனது திருவிளையாடல்
எனில்
சற்றே நிறுத்திக்கொள்
உனது அசட்டு விளையாட்டை
written after the various freaky accidents involving the killing of school kids in chennai - 17/08/2012...
No comments:
Post a Comment