மரங்களின் மெல்லிய இலைகளில்
காற்று தன் கவிதைகளை
எழுதிக் கொண்டே செல்கிறது.
கவிதைகளில் கிறங்கிய
காதல் மரங்கள்
மனிதன் படிப்பதற்காய்
இலைகள் சொரிகின்றன
காகிதங்களில் கவிதைகள்
கற்காத மனிதனா
இலைகளில் இயற்கை
ரசிக்கப் போகிறான்?
காற்று மீண்டும்
கவிதைகளுடன் அலைகிறது
மரங்கள் மீண்டும்
இலைகளுடன் அழைக்கிறது
உதிர்ந்த கவிதைகளை
பெருக்கிக்கொண்டே இருக்கிறான்
உணர்சிகளற்ற மனிதன் மட்டும்.
No comments:
Post a Comment