Search This Blog

Tuesday, June 17, 2014

இயல்பினை மீறி

எல்லோருக்கும் கேட்கிறது 
மிருதங்கத்தின் நாதம்
எனக்கு மட்டும் எங்கோ 
ஒரு மாடு கதறும் ஓசை

எல்லோருக்கும் கேட்கிறது 
புல்லாங்குழழின் கீதம்
எனக்கு மட்டும் எங்கோ 
ஒரு மூங்கில் வெட்டி வீழ்த்தப்படும் சப்தம்

எல்லோருக்கும் தெரிகிறது 
தீபாராதனையின் ஒளி
எனக்கு மட்டும் எங்கோ 
கையேந்தும் குழந்தைகளும் அலட்சியமானஇருளும் 

எல்லோருக்கும் தெரிகிறது 
அவ்வெற்றியின் குதூகலம்
எனக்கு மட்டும் எங்கோ 
மறைக்கப்பட்ட பொய்களும், மிதிக்கப்பட்டநேர்மையும்

தன்னிரக்கம் இப்படித்தான்
சிற்சில வேளைகளில்
அசிங்கமான விஸ்வரூபத்தில்

இயலாமை இப்படித்தான்
பற்பல சமயங்களில்
மயக்கும் மாரீசனாய்

உள்ளத்தின் குமுறல்
மனதின் பூட்டப்பட்ட அறை சுவர்களில்
முட்டி மோதி 
எதிரொலித்து பயமுறுத்தும்

அலைபாயும் குரங்கின் 
வால் பிடித்துச் சுழற்றி
தரையில் அடிக்க 
ஓடுகிறேன் நான்

யாரை சொல்கிறீர்கள்
பைத்தியகாரனென்று?

No comments:

Post a Comment