அறியாத நாட்களில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
கால் சுவடு பதித்தேன்
அந்த ஈர மனதில்.
காலங்கள் ஓட
ஈரங்கள் காய்ந்து
சுவடுகள் மறையும்.
மிஞ்சிய நினைவுகள் கசிந்தொழுகி
ஈரமாக்கிய மனதில்
பின்னொரு நாளொன்றில்
மெதுவாய் புலப்படும்
சில வண்ணச் சுவடுகள்.
முற்றுப்பெறா கவிதைகள்தான்
முழு அர்த்தங்கள் தருகின்றனவோ?!
No comments:
Post a Comment