Search This Blog

Thursday, November 22, 2012

அறியாத நாட்களில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
கால் சுவடு பதித்தேன்
அந்த ஈர மனதில்.

காலங்கள் ஓட
ஈரங்கள் காய்ந்து
சுவடுகள் மறையும்.

மிஞ்சிய நினைவுகள் கசிந்தொழுகி
ஈரமாக்கிய மனதில்
பின்னொரு நாளொன்றில்
மெதுவாய் புலப்படும்
சில வண்ணச் சுவடுகள்.

முற்றுப்பெறா கவிதைகள்தான்
முழு அர்த்தங்கள் தருகின்றனவோ?!

No comments:

Post a Comment