Search This Blog

Sunday, July 22, 2012

உடைந்த கண்ணாடியின்
சிதறிய சில்லுகளாய்
அறையெங்கும் தெறித்துக்கிடக்கிறது 
மனதின் ரணங்கள்

உடலின் குரலும்
உள்ளத்தின் தவிப்பும்
மீண்டும் மீண்டும் ஓடச்செய்கிறது
காதல் தேடி

காதலின் கசப்புகள்
அடி நாக்கில்.
எச்சிலும் காதலும் 
ஒன்றாய் வெளியே துப்பி
வெறுமை விலங்கோடு நகர்கிறேன்.

சிதறிய சில்லுகளை
பெருக்கித் துடைக்க
சுத்தமாகிறது மனதின் அறைகள்.

கண் மூடி அமர்கிறேன்.

மிண்டும் கேட்கிறது எங்கோ
கண்ணாடி உடைகின்ற ஓசையும்
சில்லுகள் சிதறும் சப்தமும்.

20-7-12

No comments:

Post a Comment