உடைந்த கண்ணாடியின்
சிதறிய சில்லுகளாய்
அறையெங்கும் தெறித்துக்கிடக்கிறது
மனதின் ரணங்கள்
உடலின் குரலும்
உள்ளத்தின் தவிப்பும்
மீண்டும் மீண்டும் ஓடச்செய்கிறது
காதல் தேடி
காதலின் கசப்புகள்
அடி நாக்கில்.
எச்சிலும் காதலும்
ஒன்றாய் வெளியே துப்பி
வெறுமை விலங்கோடு நகர்கிறேன்.
சிதறிய சில்லுகளை
பெருக்கித் துடைக்க
சுத்தமாகிறது மனதின் அறைகள்.
கண் மூடி அமர்கிறேன்.
மிண்டும் கேட்கிறது எங்கோ
கண்ணாடி உடைகின்ற ஓசையும்
சில்லுகள் சிதறும் சப்தமும்.
20-7-12
No comments:
Post a Comment